Wednesday, April 4, 2018

சேவை கள கைகளில் கைப்பந்து..!


கைபந்து போட்டி!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 'சேவைகளம்' நடத்திய முதலாம் ஆண்டு மாபெரும் கைப்பந்து போட்டி 27/06/2017 சரியாக இரவு 8மணிக்கு தொடங்கியது. இதிலே எங்களின் மண்ணின் மைந்தர்கள் களத்திலே சிங்கத்தை போல் காட்சி அளித்தார்கள். புதிய வேகம், புதிய யுக்தி போன்ற புதிய நிலையில் எங்களின் சேவைகளத்தின் நிர்வாகிகளின் தூண்டுதலில் கைப்பந்து போட்டி சிறப்பாக நடந்துமுடிந்த.
சேவை என்று மட்டும் இல்லாமல் சேவையிலே வீரத்தையும் காட்டிய தருணம் இந்த கைப்பந்து போட்டி. முக்கியமாக இதிலே குறிப்பிட படவேண்டிய வர்கள். எஸ்.பி.பட்டிண ஜமாத்தார்களின் பங்களிப்பு மற்றும் நண்பர்கள் நற்பணி மன்ற சகோதரர்களின் பங்களிப்பு.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “பலமான முஃமின் பலவீனமான முஃமினை விட சிறந்தவர். மேலும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குரியவருமாவார்.” (முஸ்லிம்)

அல்லாஹ் பலமான முஃமினையே விரும்புகிறான் என்ற அடிப்படையில் நாம் நம்முடைய உடல்நலத்தையும் பேண வேண்டும். உடல் பலத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையிலேயே சேவை மட்டும் இல்லாமல் உடல்நலத்திற்கு தேவையான வழுசேர்ப்பதுபோல் விளையாட்டையும் மறந்துவிடகூடாது அல்லவா?! ஹைர்... வருங்காலத்தில் உடல்பயிர்ச்சி மையமும் தொடங்க இருப்பதை இந்த தருனத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.

'அங்க என்ன?'..

'யாருக்கோ உதவி தேவைபடுகிறதாம்'

'இதோ வந்துட்டோம் சேவைகளத்தில் இருந்து...'


-சாரி வேலை வந்துடுச்சு மீண்டும் சந்திப்போம்.

No comments:

Post a Comment

கிராம சபை கூட்டத்தில் சேவைகளம்!

கிராம சபை கூட்டம் : வருடத்தில் நான்கு நாட்கள் நடக்ககூடிய கிராம சபை கூட்டம் இன்று (மே 1, 2018) எஸ்.பி.பட்டிணத்தில் அதிகமான பொதுமக்க...