எஸ்.பி.பட்டிணம் பெரிய பள்ளிவாசலில் ஒழு செய்யும் கவுஸ் பக்கம், சுவற்றை சுற்றி வலை அடித்து வைத்திருக்கின்றோம் சேவைகளம் சார்பாக.
சுவற்றை சுற்றி வலை ஏன்?
பறவைகள் சுவற்றிலே அமர்ந்துவிட்டு கழிவுகளை விட்டுச்செல்வதால் ஒழு செய்யுமிடம் மிகவும் அசுத்தமானதாக காட்சியை பார்க்க நேரும். அதனை கருத்தில் கொண்டு சேவைகளத்தில் உள்ள அனைவருடைய பங்களிப்புடன் ஒழு செய்யும் கவுஸை சுற்றி மூன்றுபக்கமும் வலையினை அமைத்துவிட்டோம்.
பறவைகள் வருவதே தண்ணீர்காக தானே அதனை அடைத்துவிட்டால் எப்படி?
நல்ல கேள்வி.! பறவைகள் வருவதை தடுக்கவில்லை இன்னும் சொல்லபோனால் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் தண்ணீர் புகட்டுவதை நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தி சொன்ன மார்க்கம் அதில் இருந்துக்கொண்டு நாம் அப்படி செய்வோமா? முதலில் சுத்தம் அவசியம். சுத்தம் இறைநம்பிக்கையில் பாதி அது உடல் சுத்தம், உடை சுத்தம், இருப்பிட சுத்தம் இதுபோன்று...
கடைசியாக, வலை அமைத்து வைத்திருப்பது பறவைகள் அந்த இடத்தில் உட்கார்ந்து அசுத்தம் பண்ணகூடாது என்பதை கருத்தில் கொண்டுதான்.





















